சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் எடுத்த துப்புரவு ஊழியர்.. மொபைலில் ஷாக் போட்டோக்கள்
Recommended Video
பெங்களூர்: சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களை ஆபாச கோணத்தில் செல்போனில் படம் எடுத்த துப்புரவு ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் இந்திராநகரிலுள்ள, ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 24 வயதாகும், தர்மேந்திர குமார் யாதவ் என்பவர் அந்த நிறுவனத்தில் துப்புரவு வேலையில் ஈடுபட்டு வந்தார்.
ரகசிய கோணங்கள்
தர்மேந்திர குமார் யாதவ், தனது செல்போனில், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை பல்வேறு கோணங்களில் ரகசியமாக படம் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். வீட்டுக்கு சென்ற பிறகு அதை பார்த்து ரசிப்பதும், நண்பர்களுக்கும் அவற்றை ஷேர் செய்து அந்த பெண்களை பற்றி ஆபாசமாக கமெண்ட் அடித்து இன்பம் காணுபவருமாக இருந்துள்ளார்.
சிக்கிய காமுகன்
இப்படித்தான், சம்பவத்தன்றும், ரகசியமாக பெண்களை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார், தர்மேந்திர குமார். அப்போது, பெண் ஊழியர் ஒருவர் இதை கவனித்துவிட்டார். இதுகுறித்து சக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊழியர்கள் சேர்ந்து, தர்மேந்திர குமாரை கையும் களவுமாக பிடித்து, செல்போனை பிடுங்கினர்.
கழிவறைக்குள் கேமரா
செல்போனின் கேலரி பகுதியில் பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆபாச கோணங்களில் பெண் ஊழியர்கள் போட்டோக்கள் அதில் இருந்தன. மேலும், சில பெண் ஊழியர்கள் கழிவறைக்கு சென்றபோது உள்ளேயிருந்து பதிவான வீடியோக்களும் இருந்தன. சுத்தம் செய்ய செல்லும்போது, ரகசியமாக செல்போனை கழிவறைக்குள் வைத்துவிட்டு பெண்களை வீடியோ எடுத்திருப்பது அம்பலமானது.
போலீஸ் நடவடிக்கை
இதுகுறித்து சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354சி-ன்கீழ், துப்புரவு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். ஆபாச படங்கள் அனைத்தும், டிசம்பர் 20 முதல் ஜனவரி 11ம் தேதிக்குள் எடுக்கப்பட்டுள்ளன என்பது விசாரணையில் தெரியவந்தது.