சவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது நடந்த டிரோன் தாக்குதல்.. கிடுகிடுவென உயரப் போகும் பெட்ரோல் விலை!
சவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது நடந்த டிரோன் தாக்குதல் காரணமாக தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை: சவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது நடந்த டிரோன் தாக்குதல் காரணமாக தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சவுதியில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் மீது ஹவுதி போராளி குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகிறது. முன்பு சிறிய சிறிய ஏவுகணைகளை பயன்படுத்திய தாக்குதல் நடத்திய ஹவுதி குலுக்க தற்போது அதி நவீன டிரோன்களை பயன்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று சவுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி மையங்களான அப்குவாய்க், குராய்ஸ் ஆகிய கிணறுகளில் ஹவுதி படை டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.
தமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை
என்ன வெடிப்பு
இதனால் அங்கு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. ஆனால் இதில் யாரும் பலியாகவில்லை. இதனால் அப்குவாய்க், குராய்ஸ் ஆகிய கிணறுகளின் எண்ணெய் உற்பத்தி மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது. தேதி அறிவிக்கப்படாமல் இந்த இரண்டு கிணறுகளும் மூடப்பட்டுள்ளது.
சிக்கல்
இந்த நிலையில் சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால் தற்போது இந்தியாவில் எண்ணெய் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சவுதியில் இந்த இரண்டு நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் சுமார் 50% கச்சா எண்ணெய் உற்பத்தி சரிந்துள்ளது. இதனால் அவர்களின் ஏற்றுமதி மொத்தமாக குறைந்துள்ளது.
மிக மோசம்
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த பிரச்சனை நீடிக்கும் என்று விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் முழுமையாக பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி நடக்காது என்று கூறுகிறார்கள். இதனால் இன்னும் ஒரு வாரத்திற்கு ஏற்றுமதி படிப்படியாக குறையும்.
அடுத்த வாரம்
ஆகவே இந்தியாவில் அடுத்த வாரம் பெட்ரோல் டீசல் விலை பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் டீசல் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியா தனது பெட்ரோல் தேவையில் அதிக அளவில் சவுதியை நம்பித்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.