For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவு.. இந்தியா கண்டுபிடித்த புதிய கோள்.. எப்படி சாத்தியமானது!

இந்திய வரலாற்றில் முதல்முறையாக நேற்று இந்திய விஞ்ஞானிகள் புதிய கோள் ஒன்றை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    புதிய கோள் கண்டுபிடித்த இந்தியா... எப்படி சாத்தியம் ?

    அஹமதாபாத்: இந்திய வரலாற்றில் முதல்முறையாக நேற்று இந்திய விஞ்ஞானிகள் புதிய கோள் ஒன்றை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளனர்.

    இதன் மூலம் கோள்களை கண்டுபிடித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஆனால் இந்த அசாத்திய கண்டுபிடிப்பை நிகழ்த்தியது இஸ்ரோ கிடையாது, தனியார் நிறுவனம் ஒன்று.

    அஹமதாபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று பூமியை போலவே இருக்கும் கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.அபிஜித் சக்ரபோர்த்தி என்பவரின் தலைமையில் இயங்கும், பிஆர்எல் என்ற குழு இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

    பெயர் என்ன

    பெயர் என்ன

    இந்த புதிய கிரகம் EPIC 211945201 என்று சூரிய குடும்பத்தில் உள்ளது. இந்த சூரிய குடும்பத்தில் இந்த கிரகம் மட்டுமே உள்ளது. இந்த கிரகத்திற்கு EPIC 211945201b என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 600 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

    வேகம்

    வேகம்

    பார்க்க பூமி போல இருந்தாலும் பூமியை விட 10 மடங்கு எடை அதிகமாக உள்ளது. இதை சுற்றி 600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் இங்கு உயிரினம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் பூமியை விட 27 சதவிகிதம் பெரிதாக இருக்கும். இது அதன் சூரியனை சுற்ற வெறும் 19.5 நாட்கள்தான் ஆகும். அதாவது பூமியில் 19.5 நாளில், அந்த கோள் அதன் சூரியனை சுற்றிவிடும்.

    ஒளி

    ஒளி

    இந்த கோளை கண்டுபிடிக்க நாசா மறைமுகமாக உதவி இருக்கிறது. நாசா தற்போது கெப்ளர் என்ற செயற்கைக்கோளை, புதிய கோள்களை கண்டுபிடிக்க விண்ணுக்கு அனுப்பியுள்ளது. ஆனால் இந்த செயற்கைகோள் கண்டுபிடிக்காத, கிரகத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் முதலில் EPIC 211945201 சூரியனை கண்டுபிடித்துள்ளது. அதில் ஏற்படும் ஒளி மாற்றங்களை வைத்து அதற்கு கோள் இருப்பதை நம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    சோதனை

    சோதனை

    இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக ராஜஸ்தானில் பெரிய தொலைநோக்கி ஒன்றுள்ளது. 1.2எம் திறன் கொண்ட இந்த தொலைநோக்கி ராஜஸ்தானில் அபு என்ற இடத்தில் உள்ளது. இதை வைத்து கடந்த ஒரு மாதமாக அந்த கோளை ஆராய்ந்து, அது நட்சத்திரம் இல்லை, பூமியை போலவே இருக்கும் கோள்தான் என்று கண்டுபிடித்துள்ளனர்.

    English summary
    New Planet found by an Indian research team from Ahmedabad for the first team.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X