ஹுட்ஹுட் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் நிதி உதவியை பெற வங்கி கணக்கு துவக்கம்!
ஹைதராபாத்: ஹுட்ஹுட் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மக்களுக்கு உதவ முன்வருவோர் பணம் அளிக்க தேவையான வங்கி கணக்கை ஆந்திர அரசு துவக்கியுள்ளது.
ஹுட்ஹுட் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் சுமார் 5 லட்சம் பேர். இவர்களை பாதுகாப்பான இடங்களில் அரசு தங்க வைத்துள்ளது. இதனிடையே வீடு, உடமைகளை இழந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க பொதுமக்களின் உதவியை ஆந்திர அரசு கோருகிறது.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>You can help us and donate for relief to SBI a/c: 33913634404. IFSC Code: SBIN0002724, Branch: SBI Treasury Branch, Gowliguda, Hyderabad.</p>— N Chandrababu Naidu (@ncbn) <a href="https://twitter.com/ncbn/status/521566111347650560">October 13, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>உதவும் எண்ணம் கொண்ட மக்களிடமிருந்து பணத்தை பெற ஆந்திர அரசு சிறப்பு வங்கி கணக்கை துவக்கியுள்ளது. இந்த வங்கி கணக்கு குறித்த விவரத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் இதோ: SBI a/c: 33913634404. IFSC Code: SBIN0002724, Branch: SBI Treasury Branch, Gowliguda, Hyderabad.
மேற்கண்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினால் அதை அரசு மீட்பு பணிகளுக்கு செலவிட பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை காசோலை மூலமாக பணம் அனுப்ப விரும்புவோர், Deputy Secretary, Revenue Department, L-Block, AP Secretariat, Hyderabad என்ற முகவரிக்கு தங்களது காசோலைகளை அனுப்புமாறும் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.