For Quick Alerts
For Daily Alerts
Just In
கண்ணூர் கோட்டையில் தோண்ட, தோண்ட வந்த பீரங்கி குண்டுகள்- இதுவரை 19,000 கண்டுபிடிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் மண்ணில் புதைந்து கிடந்த 19 ஆயிரம் பீரங்கி குண்டுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரில் புனித ஏஞ்சலோ கோட்டை என்ற இடத்தில் சாலை பணிக்காக மண்ணை தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது மண்ணுக்குள் பீரங்கி குண்டுகள் புதைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அந்த குண்டுகளை பாதுகாப்பாக தோண்டி எடுக்கும் பணி நடந்து வருகிறது.
இதுவரை 3 இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களில் இருந்து 19 ஆயிரத்து 150 பீரங்கி குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பீரங்கி குண்டுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இதுபற்றி தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் அங்கு சென்று அந்த பீரங்கி குண்டுகளை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.
Comments
English summary
In a chance finding, more than 10,000cannon balls have been excavated at the historic Fort St Angelo here.
Story first published: Friday, December 18, 2015, 15:22 [IST]