கள்ள உறவு.. சொல்லி பார்த்த கணவர்.. கைவிட மறுத்த மனைவி.. மொட்டை அடித்து ஊர்வலம்!
கள்ள உறவு காரணமாக மனைவியின் தலையை கணவன் மொட்டை அடித்துள்ளார்
பலாசூர்: வேறு ஒருவருடன் கள்ள உறவு வைத்திருந்தார் மனைவி.. சொல்லி சொல்லி பார்த்த கணவன், கடைசியில் மனைவியை உட்கார வைத்து மொட்டை அடித்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார்.
ஒடிசா மாநிலம், பலாசூர் மாவட்டத்தில் சனாகலியா படா என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒரு தம்பதி வசித்து வசிந்துள்ளனர். இதில் அந்த மனைவிக்கு வேறு ஒருவருடன் உறவு ஏற்பட்டுள்ளது.
அந்த கள்ளக்காதலன் மனைவியின் சொந்தக்காரர் என்று தெரிகிறது. பலமுறை கணவன் இது சம்பந்தமாக எச்சரித்தும், இந்த ஜோடி அடங்கவே இல்லை.
சில நாட்களுக்கு முன்புகூட இந்த கள்ளக்காதல் ஜோடி, வெளியே சென்று, ஜாலியாக இருந்துவிட்டுவீடு திரும்பி உள்ளனர். இதற்கு மேல் பொறுக்க முடியாத, கணவன் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்து, அந்த பெண்ணை வீட்டை வெளியே தள்ளினர். மனைவியின் தலையை மொட்டை அடித்து ஊர்வலமாகவும் அழைத்து சென்றுள்ளனர்.
இந்த விஷயத்தை பற்றி பெண்ணின் சகோதரர் போலீசில் புகார் அளிக்கவும், இது சம்பந்தமாக 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.