For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொட்டதற்கெல்லாம் சந்தேகம்.. மனைவிக்கு 30 இடத்தில் கத்தி குத்து.. துடிதுடித்து இறந்த ஜுபைதா!

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

குடகு: ஓவர் சந்தேகம்.. அதனால்தான் மனைவியை மொத்தம் 30 இடத்தில் கத்தியால் குத்தி கொன்றிருக்கிறார் ஒருவர்!

குடகு மாவட்டம் மடிகேரி டவுன் ஹொச படாவனே பகுதியை சேர்ந்தவர் செரீப். 20 வயதிலேயே இவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. இப்போது வயசு 27 ஆகிறது.. மனைவி பெயர் ஜுபைதா. 25 வயதாகிறது! 2 மகள்கள் உள்ளனர்.

செரீப் மடிகேரியில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். ஆனால் கொஞ்ச நாளாகவே செரீப்புக்கு, ஜுபைதாமேல் நிறைய சந்தேகம் வந்தது.. அவரது நடத்தை சம்பந்தமாக சந்தேகப்பட்டு கொண்டே இருந்தார்.

தலையை விரித்து போட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண்.. சகுனம் பார்த்த சந்திரன்.. வாய்சண்டை.. தற்கொலைதலையை விரித்து போட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண்.. சகுனம் பார்த்த சந்திரன்.. வாய்சண்டை.. தற்கொலை

சந்தேகம்

சந்தேகம்

இது சம்பந்தமாக தம்பதிக்குள் அடிக்கடி சண்டை போய் கொண்டே இருந்தது. சம்பவத்தன்று இரவும் செரீப்புக்கு ஜுபைதா மீது ஏதோ சந்தேகம் வந்துவிட்டது. இதனால் திரும்பவும் வாக்குவாதம் ஆரம்பித்து தகராறு அதிகமானது. இந்த சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துவிட்டனர்.

ஆத்திரம்

ஆத்திரம்

வழக்கம்போல, கணவன் - மனைவியை சமாதானப்படுத்திவிட்டு அவர்கள் தூங்க போனார்கள். தம்பதியும் ஆளுக்கொரு பக்கம் படுக்க போனார்கள். ஆனால் நடுராத்திரி எழுந்துகொண்டார் செரீப்.. அவரால் ஜுபைதா மீது ஆத்திரம் தீரவே இல்லை.. அதனால் கிச்சனுக்கு போய், கத்தியை எடுத்து வந்து, நன்றாக தூங்கி கொண்டிருந்த மனைவியை சரமாரியாக குத்தினார்.

30 முறை

30 முறை

ஒருமுறை கத்தியால் குத்தியதற்கே ஜுபைதா அலறி அடித்து கொண்டு எழுந்தார். ஆனால், விடாமல் மனைவியை 30 முறை சரமாரியாக குத்தினார் செரீப். 30 முறை குத்தியும் ஆத்திரம் அடங்காமல், ரத்த வெள்ளத்தில் விழுந்த கிடந்த மனைவியின் கழுத்தையும் நெரித்தார். துடிதுடித்து அங்கேயே உயிரிழந்தார் ஜுபைதா.. ஆனால் செரீப் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

கைது

கைது

ஜுபைதாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடிவந்தனர்.. ஆனால் வீடெல்லாம் ரத்தம் வழிந்து கிடக்க ஜுபைதா பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ந்தனர். பின்னர் மடிகேரி டவுன் போலீசுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர், கொலை செய்துவிட்டு அதே பகுதியில் பதுங்கி இருந்த செரீப்பையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

English summary
husband stabbed young wife 30 times for doubting her character and police arrested him near madikeri in kudagu district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X