ஆபாச பட நடிகை போல் இருப்பதாக டார்ச்சர்.. கணவன் மீது மனைவி பரபரப்பு புகார்
ஆபாச பட நடிகையை போல் இருப்பதாக கூறி கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
Recommended Video
பெங்களூரு: ஆபாச பட நடிகையை போல் இருப்பதாக கூறி கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள சன்னப்பட்டனாவைச் சேர்ந்தவர் கந்தராஜ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், மாரியப்பனபாளையாவில் வசித்து வருகின்றனர்.
நடவடிக்கையில் மாற்றம்
இந்நிலையில் கணவர் கந்தராஜ் மீது போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் மனைவி. அதில், தனது கணவரின் நடவடிக்கையில் சமீபகாலமாக மாற்றம் தெரிகிறது.
ஆபாச பட நடிகை
தனது கணவர் மாண்டியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை தனக்குத் தெரியாமல் திருமணம் செய்திருக்கிறார். என்னை, ஆபாச பட நடிகை போல இருப்பதாகக் கூறி அடிக்கடி டார்ச்சர் செய்தார் என தெரிவித்துள்ளார்.
ஆபாச படங்களை பார்க்க
அதோடு, ஆபாச படத்தையும் பார்க்க வைத்து கொடுமைப்படுத்தினார். தன்னைக் கொடுமைப்படுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மனைவியை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கந்தராஜ் இரண்டாவது திருமணம் செய்தது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.