For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் இப்போது நினைத்தால் கூட பிரதமர் ஆக முடியும்.. பாபா ராம்தேவ் சர்ச்சை பேட்டி

தான் இப்போது நினைத்தால் கூட பிரதமர் ஆக முடியும் என்று பாபா ராம்தேவ் கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாபா ராம்தேவ் சர்ச்சை பேட்டி

    கோவா: தான் இப்போது நினைத்தால் கூட பிரதமர் ஆக முடியும் என்று பாபா ராம்தேவ் கோவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

    பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இப்போது இந்தியா முழுக்க பிரபலமாகி இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் இந்த நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

    இந்த நிறுவனத்தின் திடீர் வளர்ச்சிக்கு பின் பாஜக கட்சியினர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் தற்போது, தான் நினைத்து இருந்தால் பாஜக கட்சியில் சேர்ந்து இந்திய பிரதமராக மாறியிருக்க முடியும் என்று பாபா ராம்தேவ் பேட்டி அளித்துள்ளார்.

    தேவையில்லை

    தேவையில்லை

    கோவாவில் அவர் பேசிய போது ''நான் நடத்தும் நிறுவனத்தில் இருந்து எப்போதும் எனக்கு வருமானம் தேவைப்பட்டது இல்லை. நான் இதை பொது நல நோக்கத்தோடு மட்டுமே செய்கிறேன். மக்களுக்கு நல்ல தரமான பொருட்கள் செல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் இப்படிப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

    வெள்ளையர்கள்

    வெள்ளையர்கள்

    எனக்கு சின்ன வயதில் இருந்து கிழக்கிந்திய கம்பெனி மீது பெரிய கோபம் இருக்கிறது. அதனால், அவர்களை போல ஒரு இந்திய நிறுவனம் பெரிதாக வளர வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் பதஞ்சலி நிறுவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தேன். இப்போது பெரிய நிறுவனமாக இது மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

    இப்போது நினைத்தால் கூட முடியும்

    இப்போது நினைத்தால் கூட முடியும்

    மேலும் '' நான் நினைத்து இருந்தால் இப்போது கூட பிரதமர் ஆக முடியும் . பாஜக கட்சியில் எனக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறது. கட்சி அலுவலகம் திறந்து முதலமைச்சராகவோ, எம்.பியாகவோ, பிரதமராகவோ முடியும். எனக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது'' என்றுள்ளார்.

    செய்ய மாட்டேன்

    செய்ய மாட்டேன்

    ஆனால் எனக்கு எப்போதும் பிரதமர் ஆக விருப்பமில்லை. எனக்கு அரசியலில் ஈடுபட விருப்பம் இருந்ததே இல்லை. நான் இப்படியே மக்களுக்கு சேவை செய்யவும், பதஞ்சலி மூலம் பொருட்கள் விற்கவும் விரும்புகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    English summary
    I Can become PM of India at any time says Patanjali's Baba Ramdev in a Goa festival. He says that he got a lot of opportunities to become PM but he didn't want to do that.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X