பாக். கிரிக்கெட் வீரர் அப்ரிதியுடன் செக்ஸ் வைத்தேன்: ராதே மா குட்டை உடைத்த மாடல் ட்வீட்
மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதியுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக நடிகையும், மாடலுமான அர்ஷி கான் தெரிவித்துள்ளார்.
நடிகையும் மாடலுமான அர்ஷி கான் தற்போது மீண்டும் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். சர்ச்சைக்குரிய பெண் சாமியாரான ராதே மா பெண்களை வைத்து விபச்சாரம் நடத்துவதாகவும், அவரின் ஆட்களை்தன்னையும் அந்த தொழிலுக்கு அழைத்ததாகவும் அர்ஷி கான் பரபரப்பு புகார் தெரிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷாஹித் அப்ரிதியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஆமாம், நான் அப்ரிதியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன்! ஒருவருடன் உறவு கொள்ள நான் இந்திய மீடியாவிடம் அனுமதி பெற வேண்டுமோ? இது என் தனிப்பட்ட விஷயம். என்னைப் பொறுத்தவரை இது காதல் என்று தெரிவித்துள்ளார்.
அப்ரிதியுடனான உறவு குறித்து முன்பு கேட்டதற்கு அர்ஷி கூறுகையில்,
நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள். சில தடவை சந்தித்துள்ளோம். அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றுமே இல்லை என்றார்.
Yes, I had sex with Afridi! Do I need the Indian media's permission to sleep with someone? It's my personal life. For me it was love.
— Arshi Khan (@ArshiKOfficial) September 8, 2015
மத்திய பிரதசே மாநிலம் போபாலில் பிறந்த அர்ஷி துபாயில் அப்ரிதியுடன் நேரம் செலிவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.