For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எனக்கும் ஷீனாவுக்கும் ஒத்தே வராது, எப்பொழுதும் சண்டை தான்: இந்திராணி

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: தனது மகள் ஷீனா தன்னுடைய ரகசியங்களை எல்லாம் வெளியே கூறிவிடுவேன் என்று மிரட்டியதால் அவரை வெறுத்ததாக இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

ஸ்டார் இந்தியா முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது மகள் ஷீனா போராவை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொலை செய்தார். இந்த வழக்கில் இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்திராணி போலீசாரிடம் கூறியிருப்பதாவது,

ரகசியங்கள்

ரகசியங்கள்

ஷீனா பீட்டரிடம் என்னைப் பற்றிய ரகசியங்களை எல்லாம் தெரிவித்துவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டே இருந்தார். அதனால் தான் அவரை வெறுத்தேன்.

கொடுமை

கொடுமை

நான் கடந்த காலத்தில் அனுபவித்த கொடுமைகள் எல்லாம் எனக்கு ஷீனாவை பார்க்கும்போது நினைவுக்கு வரும். எனக்கும், ஷீனாவுக்கும் ஒத்தே வராது. எப்பொழுது பேசினாலும் சண்டையில் தான் முடியும்.

பணம்

பணம்

நான் ஷீனாவின் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு பெரிய தொகையை அனுப்பினேன். ஆனால் அந்த பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர் தர மறுத்துவிட்டார்.

ராகுல்

ராகுல்

ஷீனாவையும் அவரது காதலர் ராகுலையும் பிரிக்க நினைத்தேன். ஷீனாவை வெறுத்தபோதிலும் நான் அவரை கொலை செய்யவில்லை என்றார் இந்திராணி.

English summary
Indrani Mukerjea told Mumbai police that she hated her daughter Sheena Bora as she threatened to reveal her secrets to her current husband Peter Mukerjea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X