For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்...நான் முற்றிலும் நலமாக உள்ளேன்...சவுரவ் கங்குலி பேட்டி!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரிய(பி.சி.சி,ஐ) தலைவரும், இந்திய முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Recommended Video

    டிஸ்சார்ஜ் ஆனார் தாதா கங்குலி.. முடிந்தது முதல்கட்ட ஆஞ்சியோ சிகிச்சை..!

    கடந்த 2-ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கங்குலி. அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    தான் முற்றிலும் நலமாக உள்ளதாகவும், தனக்கு நல்லபடியாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

    கடையில் திருடியவர்களுக்கு பண உதவி.. இதல்லவோ மனிதாபிமானம்.. போலீஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுகடையில் திருடியவர்களுக்கு பண உதவி.. இதல்லவோ மனிதாபிமானம்.. போலீஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டு

    மருத்துவமனையில் அனுமதி

    மருத்துவமனையில் அனுமதி

    இந்திய கிரிக்கெட் வாரிய(பி.சி.சி,ஐ) தலைவரும், இந்திய முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 48 வயதான சவுரவ் கங்குலிக்கு இதயத்தில் இரண்டு அடைப்புகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவனை டாக்டர்கள் தெரிவித்தனர். ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் மூலம் ஒரு அடைப்பு சரிசெய்யப்பட்டது.

    ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

    ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

    2-வது அடைப்பும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மூலம் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2-வது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், நாளைமறுதினம் (புதன்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

    டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

    டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

    இந்த நிலையில் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சவுரவ் கங்குலி தொடர்ந்து மருந்துகளை எடுத்துகே கொள்வார். மேலும் அவரது உடல்நிலை அவரது வீட்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் தொடர்ந்து கண்காணிப்படும். என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நலமாக உள்ளேன்

    நலமாக உள்ளேன்

    மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது சவுரவ் கங்குலி நிருபர்களிடம் கூறியதாவது:-


    நாம் நமது உயிரைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு வருகிறோம். அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனக்கு நல்லபடி சிகிச்சை அளித்து, என்னை நன்றாக கவனித்து கொண்ட உட்லேண்ட்ஸ் மருத்துவமனை மற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். விரைவில் பறக்கத் தயாராக இருப்பேன் என்று நம்புகிறேன் என்று கங்குலி கூறினார்.

    English summary
    Saurav Ganguly, chairman of the Board of Control for Cricket in India (BCCI) and former India captain, was discharged from hospital today after being admitted to hospital with chest pains
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X