வாஜ்பாய் மறைவால் பெரும் சோகம்.. ரஜினி, தனுஷ் இரங்கல்
Recommended Video
சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு பெரும் சோகம் தருவதாக உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 94. அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த்தும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:
I’m saddened to hear the demise of a great statesman Shri.Vajpayee ji. May his soul Rest In Peace.
— Rajinikanth (@rajinikanth) August 16, 2018
மாபெரும் தலைவரான வாஜ்பாய் ஜியின் மறைவுச் செய்தியால் நான் சோகமடைந்துள்ளேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று ரஜினி கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் இரங்கல்:
இதேபோல நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் விடுத்துள்ள டிவீட்டில், அடல் பிஹாரி வாஜ்பாய்ஜியின் மறைவால் பெரும் சோகமடைந்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
Deeply saddened to hear about the passing away of Sri Atal Bihari Vajpayee ji. Heartfelt condolences to the family and dear ones of the great man.
— Dhanush (@dhanushkraja) August 16, 2018