அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி
நாக்பூர்: அண்ணல் அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் தாம் புத்த மதத்துக்கு மாறப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று இரவு மாயாவதி பேசியதாவது:
அண்ணல் அம்பேத்கர் தமது மரணத்துக்கு முன்னதாக புத்த மதத்துக்கு மாறினார். நானும் மதம் மாறப் போகிறேன். நிச்சயமாக புத்தமதத்தைப் பின்பற்றி தீட்சை பெறுவேன்.
BSP chief Mayawati, in Nagpur: Babasaheb (Ambedkar) had converted his religion sometime before his death. You must be wondering about me too - regarding religious conversion. I will definitely take 'diksha' to become a follower of Buddhism but only when the time is right... (1/2) pic.twitter.com/C4f3xrR0Iw
— ANI (@ANI) October 14, 2019
ஆனால் அதற்கு சரியான காலம் வர வேண்டும். நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டி புத்த மதத்துக்கு மாறுவேன். அரசியலில் நாங்கள் இருந்தாலும் அம்பேத்கரை பின்பற்றுகிறவர்களால் இத்தகைய மதமாற்றம் என்பது சாத்தியமானதுதான்.
இவ்வாறு மாயாவதி பேசினார்.