For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸ் என்னை கொடுமைப்படுத்தியது.. நான் திருப்பி கொடுப்பேன்.. பாஜகவில் இணைந்த சாத்வி சபதம்!

காங்கிரஸ் கட்சியின் உத்தரவின் பெயரில் போலீசார் தன்னை ஜெயிலில் கொடுமைப்படுத்தினார்கள் என்று மலேகான் குண்டுவெடிப்பில் சிறை சென்ற சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

போபால்: காங்கிரஸ் கட்சியின் உத்தரவின் பெயரில் போலீசார் தன்னை ஜெயிலில் கொடுமைப்படுத்தினார்கள் என்று மலேகான் குண்டுவெடிப்பில் சிறை சென்ற சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார். இவர் பாஜக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.

மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா தாக்குர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.

இதில் கைது செய்யப்பட்டவர்தான் இந்து சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர். இவர் மொத்தம் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

எனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்எனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்

பெயிலில் வந்தார்

பெயிலில் வந்தார்

இதையடுத்து உடல் நலம் சரியில்லை என்று கூறி பெயிலில் வெளியே வந்த இவர் தற்போது இவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் இவர் பாஜகவில் இணைந்தார். வரும் லோக்சபா தேர்தலில் இவர் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் திக் விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிட இருக்கிறார். போபால் தொகுதியில் இவர் களமிறங்குகிறார்.

லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!

என்ன பேட்டி

என்ன பேட்டி

இந்த நிலையில் இதுகுறித்து சாத்வி தற்போது பேட்டி அளித்து இருக்கிறார். அதில் என் மீது காங்கிரஸ் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறது. அதை பொய் என்று நிரூபித்து நான் சிறையில் இருந்து முழுமையாக வெளியே வருவேன். என்னை காங்கிரஸ் படுத்திய கொடுமைகளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் உத்தரவின் பேரில் நான் முறைகேடாக கைது செய்யப்பட்டேன். என்னை 13 நாட்கள் அடைத்து வைத்து கொடுமை படுத்தினார்கள். தினமும் என்னை மோசமாக தாக்கினார்கள். இதை எல்லாம் நான் மறக்க மாட்டேன். நான் செய்யாத குண்டுவெடிப்பு சம்பவத்தை என் மீது போட்டு, எனக்கு முடிவு கட்ட பார்த்தார்கள்.

இந்து காங்கிரஸ்

இந்து காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி இந்துக்களை தீவிரவாதிகள் என்று கூறுகிறது. நான் ஒரு இந்து சாமியார் என்பதால் என்னை இப்படி கொடுமை படுத்துகிறார்கள். அவர்களுக்கு மக்கள்தான் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். நான் பட்ட துன்பங்களை எந்த விதமான சகோதரியும் வாழ்க்கையில் பட கூடாது என்று, சாத்வி குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
I will pay back for all those tortures says Malegaon bomb blast accused Sadhvi Pragya Thakur after joining in BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X