பாஜகவில் மீண்டும் இணைகிறேன்: எதியூரப்பா தகவல்
பெங்களூர்: பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இணையப் போவதாக கர்நாடகா ஜனதா கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எதியூரப்பா அறிவித்துள்ளார்.
பாரதிய ஜனதாவில் எதியூரப்பா மீண்டும் இணைவது குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ராஜ்நாத்சிங், எதியூரப்பா இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அக்கட்சியில் சேர எதியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளதாகவும், எதியூரப்பாவை இணைத்துக்கொள்ள பாரதிய ஜனதா மாநில செயற்குழு ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. பின்னர் எதியூரப்பா தலைமையில் கர்நாடகா ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பாஜகவில் கர்நாடகா ஜனதாவை இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளார்களிடம் பேசிய எதியூரப்பா, பாரதிய ஜனதாவில் மீண்டும் இணைய உள்ளேன். நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள் என்றார்.