For Daily Alerts
Just In
3 பேருடன் சென்ற இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மாயம்.. தேடும் பணி தீவிரம்
கவுகாத்தி: அருணாசல பிரதேச மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மாயமாகியுள்ளது. ஹெலிகாப்டரில் விமான படை வீரர்கள் 3 பேர் இருந்தனர்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் திடீரென மாயமானது. பாபும பரே மாவட்டத்தில் உள்ள சாகலீ என்ற பகுதியில் சென்ற போது ஹெலிகாப்டர் மாயமானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாயமான விமானத்தில் 3 பேர் பயணம் செய்ததாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடந்து வருகிறது.
Comments
English summary
Indian Air Force's Advanced Light Helicopter (ALH) on Tuesday went missing in Sagalee area of Arunachal Pradesh's Papumpare district.
Story first published: Tuesday, July 4, 2017, 20:23 [IST]