For Daily Alerts
Just In
பொக்ரானில் விமானப் படையின் ஜாகுவார் விமானம் விழுந்து விபத்து- விமானிகள் உயிர் தப்பினர்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரானில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 2 விமானிகளும் பாரசூட் மூலம் உயிர் தப்பினர்.
இந்திய விமானப் படை விமானங்கள் தொடர்ந்து விழுந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக இருந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
கடந்த மாதமும் ராஜஸ்தானில் போர்விமானங்கள் விழுந்து நொறுங்கின. இந்த நிலையில் இன்றும் ராஜஸ்தானின் பொக்ரானில் விமானப் படைக்கு சொந்தமான ஜாகுவார் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
இவ்விமானத்தில் இருந்த 2 பயணிகளும் பாராசூட் மூலம் தரையிறங்கி உயிர் தப்பினர்.
Comments
English summary
IAF's Jaguar fighter jet crashed over Pokhran while on a routine training sortie. Both pilots ejected safely.
Story first published: Monday, October 3, 2016, 16:32 [IST]