For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜீவ் காந்தியைப் போல மோடியையும் மனித வெடிகுண்டு மூலம் கொல்ல சதி... மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி : பிகார் செல்லும் பிரதமர் நரேந்திர மோடியை, மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்ய சதி நடப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது.

நாளை பிகார் மாநிலம் பாட்னா மற்றும் முசாபர்பூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சட்ட.ப் பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்குகிறார்.

modi

இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஸ்ரீபெரும்பத்தூரில் மனிதவெடிகுண்டு மூலம் கொலை செய்ததை போன்று பிரதமர் மோடியை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் பிரதமரின் பயணம் மற்றும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற பெண் மாவோயிஸ்ட் மனித வெடிகுண்டாக மாறி இந்த தாக்குதலை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக மோடி பாட்னாவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அங்கு தொடர் குண்டுகள் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Intelligence agencies have warned of a possible human bomb attack on Prime Minister Narendra Modi either during his visit to Patna or at the public rally he is scheduled to attend in Muzaffarpur on tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X