மணிப்பூரில் முதல்வர் இபோபி சிங் வெற்றி.. தவுபல் தொகுதியில் டெபாசிட்டை இழந்தார் இரோம் ஷர்மிளா
மணிப்பூர் மாநிலத்தின் தவுபல் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் வெற்றி பெற்றுள்ளார்.
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் தவுபல் தொகுதியில் போட்டியிட்ட முதலவர் ஓக்ராம் இபோபி சிங் வெற்றி பெற்றுள்ளார். அதேதொகுதியில் போட்டியிட்ட போராளி இரோம் ஷர்மிளா டெபாசிட்டை படுதோல்வி அடைந்தார்.
மணிப்பூரில் உள்ள 60 மாநிலத்துக்கும் மார்ச் 4 மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப் பதிவின் போது, 34 வாக்குச் சாவடிகளில், முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்ததை அடுத்து மார்ச் 9ஆம் தேதி மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் தவுபல் தொகுதியில் போட்டியிட்டார். இதேதொகுதியில் முதல்வரை எதிர்த்து புதிதாக கட்சித் தொடங்கியுள்ள போராளி இரோம் ஷர்மிளா போட்டியிட்டார்.
ஆனால் அவர் வெறும் 51 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதன்மூலம் டெபாசிட்டை இழந்த அவர் படுதோல்வி அடைந்துள்ளார்.
அதேநேரத்தில் அந்த தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஓக்ராம் இபோபி சிங்குக்கும் பாஜக வேட்பாளருக்கும் கடுமையான போட்டி நிலவியது. இருப்பினும் 10,400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அத்தொகுதி தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.