For Daily Alerts
Just In
சுரங்க ஊழலில் பிரதமரே முதல் குற்றவாளி: முன்னாள் நிலக்கரிதுறை செயலர் பிரகாஷ்
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் சிபிஐ குற்றவாளிகளை கண்டுபிடிக்குமானால் அதில் பிரதமரே முதல் குற்றவாளியாக இருப்பார் என்று நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பிரகாஷ் சந்திர பரக் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐ 14வது எப்.ஐ.ஆர். பதிவு செய்தது. அதில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா, முன்னாள் நிலக்கரி துறை செயலர் பிரகாஷ் சந்திர பரக் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரகாஷ் சந்திர பரக், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு விசாரணை இறுதி கட்டத்தை அடைந்தால் அதில் நிலக்கரி சுரங்கங்களுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் மன்மோகன்சிங்கே முதல் குற்றவாளியாக இருப்பார் என்றார்.
Comments
English summary
Former union coal secretary Prakash Chandra Parakh said on Tuesday that if the CBI smelt a conspiracy in allocation of coal blocks, then Prime Minister Manmohan Singh should be an accused too since he signed off on the decision.