டெல்லி வளர்ச்சிக்காக தேவைப்பட்டால் நானும் கேஜ்ரிவாலும் பிச்சை எடுப்போம்: மணிஷ் சிசோடியா
டெல்லி: டெல்லியின் வளர்ச்சிக்கு தேவைப்பட்டால் நானும், அரவிந்த் கேஜ்ரிவாலும் பிச்சையும் எடுப்போம்; அமைச்சர்களின் ஊதியத்தையும் நிறுத்துவோம் என்று துணை முதல்வராக பதவியேற்க உள்ள மணிஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றது. சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், நாளை முதல்வராக பதவி ஏற்கிறார்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் முந்தைய அரசில் இரண்டாம் இடத்தில் இருந்த மணிஷ் சிசோடியாவுக்கு தற்போது துணை முதல்வர் பதவி அளிக்கப்படுகிறது.
துணை முதல்வராக பதவியேற்க உள்ள மணிஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லியின் வளர்ச்சிக்கு தேவைப்பட்டால் நானும், கெஜ்ரிவாலும் பொதுமக்களிடம் பிச்சையும் எடுப்போம். எங்கள் அரசின் அமைச்சர்களின் ஊதியத்தையும் நிறுத்திவிடுவோம் என்றார்.
மேலும், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதியையும் ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றும். நாங்கள் அனைத்து பகுதியிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியில் 15 லட்சம் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைப்போம். தேர்தலின் போது பெண்களுக்கான பாதுகாப்பு பெரிய விவகாரமாக இருந்தது/ பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாங்கள் நடவடிக்கை என்றார் சிசோடியா.