For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே.வங்கத்தில் வட இந்தியர்கள் வங்காள மொழிதான் பேச வேண்டும்: மமதா அதிரடி

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வட இந்தியர்கள் வங்காள மொழிதான் பேச வேண்டும் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அதிரடியாக வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இந்தி மொழியை திணிப்பதையும் வட இந்தியர்கள் குடியேற்றத்துக்கும் எதிராகவும் மேற்கு வங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

If you are in Bengal you have to speak Bangla, says Mamata

அண்மையில் ஆங்கில டிவி சேனல் விவாதத்தில் இந்தியில் பேசியவர்களுக்கு வங்க மொழியில் பேசி மூக்குடைத்தார் பேராசிரியர் கார்கா சட்டர்ஜி. தொடர்ந்து இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக தமிழகத்தைப் போலவே உக்கிர குரல் கொடுத்து வருகிறது மேற்கு வங்கம்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மமதா பானர்ஜி, வங்காள மொழியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நான் பீகாருக்கும் உத்தரபிரதேசத்துக்கும், பஞ்சாப் மாநிலத்துக்கும் போனால் அவர்களது தாய்மொழியில்தான் பேசுகிறேன். நீங்கள் மேற்கு வங்கத்துக்கு வந்தால் வங்காள மொழியில்தான் பேச வேண்டும்.

தயாநிதிமாறனையே முன்வைத்து இந்தி திணிப்பு உத்தரவு வாபஸ்- 'நச்' ஸ்கோர் செய்த ஸ்டாலின்!தயாநிதிமாறனையே முன்வைத்து இந்தி திணிப்பு உத்தரவு வாபஸ்- 'நச்' ஸ்கோர் செய்த ஸ்டாலின்!

வெளிமாநில கிரிமினல்கள் மேற்கு வங்கத்தில் தங்கி, இரு சக்கர வாகனங்களில் வலம் வருவதை நான் சகித்துக் கொள்ளமாட்டேன் என காட்டமாக கூறியுள்ளார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee said that, When I go to Bihar, UP, Pujnab, I speak in their language, if you are in Bengal you have to speak Bangla.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X