என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி... கோவா விழாவில் ரஜினிகாந்த் தமிழில் உருக்கம்
பனாஜி: தம்மை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் தமிழில் உருக்கமாக பேசினார்.
கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இன்று இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது வழங்கப்பட்டது.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு இந்த விருதை வழங்கினர். இவ்விருதை பெற்றுக் கொண்ட ரஜினிகாந்த் ஆங்கிலத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பின்னர் தமிழில், என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என உருக்கமாகவும் நெகிழ்வாகவும் குறிப்பிட்டார். ரஜினி தமிழில் நன்றி தெரிவித்த போது அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது.
I would like to dedicate this award to my producers, directors and all technicians who worked in my films & above all to my fans: #Rajinikanth @rajinikanth | #IFFI2019 | #IFFI50 | #IFFIGoldenJubilee pic.twitter.com/MzobXk9BVx
— All India Radio News (@airnewsalerts) November 20, 2019