வளையல் போட்டு பொட்டு வைத்து கிரிராஜ் முகத்துல கரியை பூசுங்க..: சொல்வது லாலு
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியாவை மிக மோசமாக விமர்சித்த மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்குக்கு வளையல் போட்டு, பொட்டு வைத்து முகத்துல கரியைப் பூசுனாதான் சரிப்படும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சாடியுள்ளார்.
பீகார் மாநிலம் ஹாஜிபூரில் பேசிய மத்திய இணையமைச்சர் கிரிராஜ் சிங், ராஜிவ்காந்தி ஒரு நைஜுரிய நாட்டு பெண்ணை மனந்திருந்தால் அந்த பெண்ணை காங்கிரஸ கட்சியினர் தலைவராக ஏற்றிருப்பார்களா என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ தலைவர் சோனியா காந்தி நிறம் குறித்து திடீரென கிரிராஜ் சிங் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
டெல்லியில் கிரிராஜ்சிங் வீட்டை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், வரம்பு மீறி அநாகரிகமாக விமர்சிக்கும் அமைச்சர் கிரிராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு வளையல், பொட்டு அணிவித்து முகத்தில் கரியை பூச வேண்டும் என்று கொந்தளித்திருக்கிறார்.