For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.எம்.எஸ். மூலம் தேர்தல் புறக்கணிப்புக்கு கட்டளையிடும் மாவோயிஸ்டுகள்!

By Mathi
Google Oneindia Tamil News

பாட்னா: லோக்சபா தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பல்க் எஸ்.எம்.எஸ். மூலம் மாவோயிஸ்டுகள் கட்டளையிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீகார், ஜார்க்கண்ட், ஒடிஷா, சத்தீஸ்கர், ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பீகாரில் பல தொகுதிகளில் சுவரொட்டிகளையும் மாவோயிஸ்டுகள் ஒட்டியிருக்கின்றனர். இந்த போஸ்டர்களை போலீசார் பல இடங்களில் அகற்றி இருக்கின்றனர்.

கடந்த காலங்களைப் போல் அல்லாமல் இம்முறை அதாவது முதல் முறையாக பல்க் எஸ்.எம்.எஸ். மூலம் மாவோயிஸ்டுகள் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மாவோயிஸ்டுகளின் மூத்த நிர்வாகி அவினாஸ் பெயரில் தேர்தல் புறக்கணிப்புக்கான அழைப்பை மாவோயிஸ்டுகள் அனுப்பி வருகின்றனர். தொழிலாளர்கள், பெண்கள், கல்வியாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்தும் அந்தந்த மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
In a first, Maoists are using SMS service to appeal to people to boycott the Lok Sabha polls in Bihar and neighbouring Jharkhand, police officials said on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X