நேற்று இரவு.. லடாக்கில் அத்துமீறிய சீனா.. பாங்காங் திசோவில் பரபரப்பு.. விரட்டி அடித்த இந்திய ராணுவம்
லடாக்: நேற்று இரவு இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைய முயற்சி செய்துள்ளதாகவும், பாங்காங் திசோ நதி அருகே சீன வீரர்கள் அத்துமீற முயற்சி செய்துள்ளதாகவும் இந்திய ராணுவம் செய்தி வெளியிட்டு இருக்கிறது .
Recommended Video
இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து மோதல் நிலவி வருகிறது. கடந்த மே மாதம் லடாக் மற்றும் சிக்கிம் அருகே சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது எல்லையில் சின்ன மோதல் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து லடாக் பகுதியில் மோதல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.அதிலும் கடந்த ஜூன் மாதம் லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இந்தியா - சீனா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
நெருக்கடியில் பொருளாதாரம்.. "தலையாட்டி பொம்மை" பற்றி சிலாகித்த மோடி.. அனல்பறக்க கிளம்பிய சர்ச்சை
ஜூலை பேச்சுவார்த்தை
இந்த நிலையில் அதன்பின் ஜூலை 6ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளும் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்க ஒப்புக்கொண்டது. 2 கிமீ தூரத்திற்கு எல்லையில் படைகளை வாபஸ் வாங்க இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டது. ஆனால் லடாக்கில் பாங்காங் திசோ மற்றும் ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இன்னும் சீனாவின் படைகள் சில இருந்தது. அங்கு லேசான பதற்றம் நிலவி வந்தது.
இப்போது என்ன
இந்த நிலையில் நேற்று இரவு இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைய முயற்சி செய்துள்ளதாகவும், பாங்காங் திசோ நதி அருகே சீன வீரர்கள் அத்துமீற முயற்சி செய்துள்ளதாகவும் இந்திய ராணுவம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆகஸ்ட் 29, 30 இரவுகளில் லடாக்கில் சீனா அத்துமீறி உள்ளது.
மீண்டும் அத்துமீறல்
பாங்காங் திசோ நதி அருகே சீன வீரர்கள் அத்துமீற முயற்சி செய்தனர். இந்திய வீரர்கள் ஏற்கனவே பாங்காங் திசோ பகுதியில் தயார் நிலையில் இருந்தனர். பான்காங் திசோ ஏரி அருகே அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய படை விரட்டியடித்தது. சீனாவின் அத்துமீறலை இந்தியா எதிர்பார்த்தே இருந்தது. எல்லை பேச்சுவார்த்தையை மீறி சீனா செயல்பட முயல்கிறது.
நிலைமை மோசம்
கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டு வருகிறது. எல்லையில் நிலைமையை மோசமாக்க வேண்டும் என்று சீனா செயல்பட்டு வருகிறது. இந்தியா அங்கு தற்போது படைகளை குவித்து பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. எல்லையில் அமைதியை நிலைநாட்ட இந்தியா அனைத்து பணிகளையும் செய்யும், இந்திய எல்லையை காக்க அனைத்து பணிகளையும் செய்வோம் என்று, என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.