16வது லோக்சபாவில் தாத்தா, பாட்டிகள்தான் அதிகம்... படித்தவர்களும் குறைவு!
டெல்லி: 16வது லோக்சபா அதிக வயதான எம்பிக்களை உடையதாக அமைய உள்ளது.
543 எம்.பிக்களை உடைய இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. கடந்த வெள்ளியன்று தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன.
தேர்தல் முடிவுகளின் படி, புதிதாக அமைய உள்ள லோக்சபாவில் 55 வயதுக்கு அதிகமானவர்கள் 53 சதவீதம் பேர் உள்ளனர். எனவே, இந்த நாடாளுமன்றம்தான், வயதானவர்களை அதிகம் கொண்டதாக உள்ளது.
அத்வானி...
இந்த லோக்சபாவில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானிதான், மிக அதிக வயதான எம்.பி ஆவார். இவரது வயது 86.
வயது குறைந்த எம்.பிக்கள்...
மேலும், 13 சதவீதம் பேர் அதாவது 71 எம்.பி.க்கள் 40 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.
ஜெயவர்த்தன்...
12 எம்.பிக்கள் 30வயதுக்கும் குறைவானவர்கள். அதில் நான்கு பேர் பெண்கள். தென்சென்னை எம்.பி. ஜெயவர்த்தன் உள்பட 5 பேருக்கு 26 வயதுதான் ஆகிறது.
படித்தவர்கள் குறைவு...
வயதானவர்களைப் போலவே இந்த நாடாளுமன்றத்தில் படித்தவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே அமைந்துள்ளது.
பட்டதாரிகள்...டாக்டர்கள்...
75 சதவீதம்பேர் தான் பட்டதாரிகள். 6 சதவீதம்பேர் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். 13 சதவீதம்பேர், உயர்நிலைப்பள்ளி தேர்வைக்கூட முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.