வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 செயற்கைக்கோள்!
அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா: அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தொடக்கம் முதலே நிர்ணயிக்கப் பட்ட பாதையில் சென்று, இலக்கை வெற்றிகரமாக அடைந்தது.
அதிக எடை கொண்ட ஜி சாட்-19 செயற்கைக்கோள் இன்று மாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது.
இதைத்தொடர்ந்து வானிலை நிலவரங்கள் குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இந்த ஜி சாட் செயற்கைக்கோளின் மாலை 5.28 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
முதல் முறையாக 3 டன்னிற்கும் மேல் எடைகொண்ட செயற்கைகோள் உள்நாட்டிலேயே
தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.