For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தானுக்கு ஆதரவா? மலேசியா, துருக்கியை பகைக்கும் இந்தியா.. உறவில் ஏற்படும் பெரும் விரிசல்!

எஃப்ஏடிஎஃப் (FATF) ஆலோசனையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால் மலேசியா மற்றும் துருக்கி மீது இந்தியா கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    India may fight with Malaysia and Turkey for supporting Pakistan

    டெல்லி: எஃப்ஏடிஎஃப் (FATF) ஆலோசனையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால் மலேசியா மற்றும் துருக்கி மீது இந்தியா கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தான் இந்தியா இடையிலான மோதல் போக்கு தற்போது ஆசியா கண்டத்தில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்க தொடங்கி உள்ளது. இந்த பிரச்சனையில் தற்போது சீனா, துருக்கி, மலேசியா போன்ற நாடுகள் தலை நீட்ட தொடங்கி உள்ளது.

    சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (பினான்சியல் ஆக்சன் டாஸ்க் போர்ஸ் - Financial Action Task Force - FATF) தீவிரவாத குற்றங்கள், அது தொடர்பான பொருளாதார குற்றங்கள், பண மோசடிகள் குறித்து விசாரிக்கும் அமைப்பாகும். தீவிரவாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பதை இந்த அமைப்பு தீவிரமாக கண்காணிக்கும்.

    நியூயார்க் டூ சிட்னி.. இடைவிடாது 19 மணி நேர பயணம் செய்த உலகின் மிக நீண்ட இடைநில்லா விமானம்நியூயார்க் டூ சிட்னி.. இடைவிடாது 19 மணி நேர பயணம் செய்த உலகின் மிக நீண்ட இடைநில்லா விமானம்

    என்ன கண்டிப்பு

    என்ன கண்டிப்பு

    கடந்த சில தினங்களுக்கு முன், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF) கண்டித்தது. இதனால் பாகிஸ்தான் பிளாக் லிஸ்ட் செய்யப்படுகிறதா என்று கேள்வி எழுந்தது. தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளை எஃப்ஏடிஎஃப் பிளாக் லிஸ்ட் செய்வது வழக்கம். இந்த அமைப்புதான் உலகில் உள்ள நாடுகளை தரம் பிரிக்கும்.

    வாக்கு எடுப்பு

    வாக்கு எடுப்பு

    தீவிரவாத அமைப்புகள் எளிதாக பொருளாதார உதவிகளை பெறுவதாக கூறி கடந்த வருடம் ஜூன் மாதம் பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் கிரே லிஸ்ட் செய்தது. ஆனால் இதற்கு பின்பும் கூட பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாகிஸ்தானுக்கு பிளாக் லிஸ்ட் கொடுக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வாக்கெடுப்பு நடந்தது.

    எதுவும் இல்லை

    எதுவும் இல்லை

    ஆனால் இதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகள் வாக்களித்தது. பாகிஸ்தானுக்கு பிளாக் லிஸ்ட் கொடுக்க கூடாது. அந்த நாட்டை தடை செய்ய கூடாது என்று மூன்று நாடுகளும் வாக்களித்தது. இதனால் பாகிஸ்தான் எஃப்ஏடிஎஃப் நடவடிக்கையில் இருந்து தப்பித்தது.

    கோபம்

    கோபம்

    இதையடுத்து தற்போது துருக்கி மற்றும் மலேசியா மீது இந்தியா கோபத்தில் இருக்கிறது. இதனால் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தாவர எண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களுக்கு 5% கூடுதலாக சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் மொத்தமாக இந்தியா மலேசியாவிடம் இருந்து பால்ம் ஆயில் வாங்குவதை நிறுத்திவிடும் என்று கூறுகிறார்கள்.

    மலேசியா அச்சம்

    மலேசியா அச்சம்

    உலகிலேயே அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முக்கியமான இடத்தில் இருக்கிறது. மலேசியா இதனால் பெரிய அளவில் இந்தியாவை நம்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா இப்படி ஒரு முடிவை எடுக்க இருப்பது மலேசியாவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    துருக்கி எதிர்ப்பு

    துருக்கி எதிர்ப்பு

    அதேபோல் துருக்கிக்கு எதிராகவும் இந்தியா நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. துருக்கியின் பாதுகாப்பு துறை நிறுவனமான அனடோலு ஷிப் யார்டு நிறுவனத்துடன் ஏற்கனவே இந்தியா உறவை முறித்துக் கொண்டது. இன்னும் சில துருக்கி நிறுவனங்களுடன் மொத்தமாக இந்தியா உறவை முறிக்க உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    போர் எப்படி

    போர் எப்படி

    சிரியா மீது துருக்கி தாக்குதல் நடத்துவதற்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளது. சிரியாவில் உள்ள குர்து படைகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானை காரணம் காட்டி துருக்கியை இந்த பிரச்சனையில் இந்தியா எதிர்க்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    India may fight with Malaysia and Turkey for supporting Pakistan in Terror Watchdog FATF voting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X