அதிகாலை 12.01 மணிக்கு தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடும் மக்கள்!
பாட்னா: 71 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், பீகார் மாநிலத்தில் புர்னியா பகுதி மக்கள் மட்டும் நள்ளிரவு 12.01 மணிக்கு தேசிய கொடியேற்றி சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளனர்.
இந்தியாவின் பெரும்பகுதிகளில், ஆகஸ்ட் 15 காலை காலையில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், சுதந்திர தினத்திலிருந்தும், நள்ளிரவில் 12:01 மணியளவில் கொடியை ஏற்றுவதற்கு ஒரு சிறப்பு பாரம்பரியம் உள்ளது. இந்த மரபு சுதந்திர போராட்ட வீரரான ராமேஷ்வர் பிரசாத் சிங்கால் தொடங்கப்பட்டது.
மவுண்ட்பேட்டன் இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்தபோது ராமேஷ்வர் பிரசாத் சிங், சுதந்திர போராட்ட வீரர்களான ஷாஷுல் ஹக் மற்றும் ம்ரத்னா ஷா ஆகியோருடன் சேர்ந்து ஆகஸ்டா கிராந்தி ஜனதா சௌக்கில் 10,000 பேர் கூட்டத்திற்கு இடையே கொடி ஏற்றினார்.
"இது ஒரு நீண்ட பாரம்பரியம் மற்றும் நாங்கள் அதை தொடர்கிறோம் இது எங்களுக்கு ஒரு மிக அருமையான விஷயம். வாகா எல்லையிலும் இதுபோன்ற ஒரு பாரம்பரியம் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது" என்று ஒரு குடியிருப்பாளர் கூறினார்.
ரமேஷர் பிரசாத் சிங்கின் மரபுவழியால் முன்னுதாரணமாக இந்த பாரம்பரியத்தை எடுத்துக் கொண்டார்கள். முதலில் அவரது மகள், சுலேகா மற்றும் இப்போது அவரது பேரன், விபுல் ஆகியோர் இதை பின்பற்றுகிறார்கள். இன்று அதிகாலையும் இப்படித்தானந் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.