உலகின் 30 நாடுகளை பீதியில் ஆழ்த்தி வரும் மர்ம உலோகத்தூண்.. இப்போது இந்தியாவிலுமா. உண்மை என்ன
அகமதாபாத்: உலகின் 30 நாடுகளை பீதியில் ஆழ்த்தி வரும் மர்ம உலோகத்தூண் தோன்றிய விவகாரம், இந்தியாவையும் இப்போது ஆட்டிபடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பூங்காவில் திடீரென உலோகத் தூண் தோன்றி மறைந்ததாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதன் உண்மை தன்மை பெரும் கேள்விகளை எழுப்புகிறது
Recommended Video
உலகெங்கிலும் அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள நகரங்களில் திடீரெனத் தோன்றியது மோனோலித் எனப்படும் மர்ம உலோகத் தூண், இந்த தூண் தோன்றிய பின்னர் மாயமாகியதாக சொல்லப்படுகிறது.
இப்போது இந்தியாவிலும் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த மர்மமான உலோகத்தூணை பார்த்ததாக பொதுமக்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக புகைப்படத்தையும் பகிரந்துள்ளது,
சிம்பொனி பார்க்
அகமதாபாத் மாநகரில் தால்தேஜ் பகுதியில் உள்ள தனியார் நிறுவனமான சிம்பொனியால் தோட்டத்தில் பராமரிக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இதுபற்றி சில எண்களும் பதிவிடப்பட்டு பகிரப்பட்டது.
பேஸ்புக்கில் மறுப்பு
ஆனால் அப்படி ஒரு உலகத்தூணை நாங்கள் பராமரிக்கவே இல்லை என்று சிம்பொனி கூறுகிறது. ஆனால் புகைப்படம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. எனவே இதன் உண்மை தன்மை குறித்து கேள்விகள் எழுகிறது.
என்ன சொல்கிறார்
இதனிடையே அஹமதாபாத் பூங்காவில் பணிபுரியும் தோட்டக்காரரான ஆசாராம், " நான் சாய்ந்திரம் வீட்டிற்குச் சென்றபோது, அது இல்லை. ஆனால் மறுநாள் காலையில் நான் வேலைக்குத் வந்த போது தூண்த அமைப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்." என்று கூறினார்.
செல்பி
அகமதாபாத் முழுவதும் மர்ம உலோகத் தூண் அமைப்பு ஒரு பேசுபொருளாக மாறியது. அந்த நகர மக்கள் பலர் பூங்காவுக்கு படையெடுத்து செல்பிக்களை எடுத்த பேஸ்புக்கில் பதிவிட்டு வருகிறார்கள். மக்களிடம் திடீரென உருவாகும் பீதி அப்படியே உலகம் முழுவதும் பரவுவது இயல்பு. அப்படி ஒன்றாகத்தான் இந்த மர்ம உலோகத்தூண் விஷயத்தையும் பார்க்க வேண்டும்,