காஷ்மீரில் இந்தியா- பாக் ராணுவம் இடையே துப்பாக்கிச் சண்டை
அக்னூல்: ஜம்மு காஷ்மீரில் இந்தியா பாகிஸ்தான் ராணுவம் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து வன்முறைகளை பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது. அங்கு அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அனைத்துக் கட்சி குழு ஒன்று காஷ்மீர் செல்கிறது. அக்குழுவினர் காஷ்மீரில் அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
Ceasefire violation by Pakistan along the Line of Control in Akhnoor sector (J&K), exchange of fire still on.
— ANI (@ANI_news) September 2, 2016
இந்த நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அக்னூல் பகுதிகளில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் நிலைகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருதரப்புக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.