போர் மேகம் சூழ்ந்த இந்தியா பாக் எல்லை.. வெறிச்சோடிய வானம்.. ஒரு விமானமும் பறக்கவில்லை
இந்தியா-பாகிஸ்தான் விமான சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஜம்மு: இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் போர் மேகம் சூழ்ந்திருப்பதால் விமானமே பறக்காமல் அந்தப் பிராந்தியமே வெறிச்சோடிக் கிடக்கிறது.
நேற்று பதிலடி தந்ததற்கு ஆவேசப்பட்ட பாகிஸ்தான், இன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வேலையை காட்ட ஆரம்பித்தது. இதனால் இந்திய விமானப் படையினர் ஊடுருவிய அந்நாட்டு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள்.
விமான சேவை
இதன் காரணமாக எல்லையில் தொடர்ந்து பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. மேலும் போர் மூளும் சூழலும் ஏற்பட்டு உள்ளதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் வேலையாக இந்திய பாகிஸ்தான் இடையிலான விமான சேவை நிறுத்தப்பட்டது. மறு மார்க்கத்திலும் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
திறக்கப்பட்டன
குறிப்பாக ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், சிம்லா, குலுமணாலி, பிதாரோகார், பதான்கோட், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் ஆகிய 8 இடங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டன.
அச்சம்
இரு நாடுகளும் இப்படி முட்டிக் கொண்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமானங்களும் இந்த இரு நாட்டு பக்கம் வர தயங்குவதாகவும், அச்சப்படுவதாகவும் தெரிகிறது. எனவே எல்லைப் பகுதி வான்வெளி போக்குவரத்து இல்லாமல் அமைதியாக உள்ளது.
|
வெறிச்சோடியது
இந்தப் பக்கமாக விமானங்கள் பறக்காமல் வேறு மார்க்கத்தில் திசை திருப்பிவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வானமே வெறிச்சோடி உள்ளது. இதை ஒருவர் ரேடார் படத்துடன் டிவீட் போட்டுள்ளார். பிற்பகல் மணி போல வானம் இப்படித்தான் இருந்தது என்று பதிவிட்டுள்ளார். அதேசமயம், எல்லைப் பகுதியைச் சுற்றிலும் விமானப் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. வழக்கம் போல விமானங்கள் சென்று வருகின்றன.