"எமோஷனல் ஏகாம்பரங்கள்" நிறைந்த நாடுகள் வரிசையில் 88வது இடத்தில் இந்தியா!
டெல்லி: அதிக அளவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 88வது இடம் கிடைத்துள்ளது. இந்த வரிசையில் லத்தீன் அமெரிக்க நாடுகளான பொலிவியா மற்றும் எல்சால்வடர் ஆகிய நாடுகள் முதல் வரிசையைப் பிடித்துள்ளன.
இந்த நாடுகளில் வாழ்வோர் அதிக அளவில் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், சந்தோஷத்தை உடனுக்குடன் வெளிப்படுத்துபவர்களாகவும் உள்ளனராம்.
வங்கதேசத்தவர் கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படாதவர்கள் என்றும் இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. மிகவும் குறைந்த அளவில் அவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்களாம்.
முதலிடம் பொலிவியா
அதிக உணர்ச்சிவசப்படுவோர் நிறைந்த நாடுகள் வரிசையில் முதலிடம் பொலிவியாவுக்கு. 2வது இடம் எல் சால்வடார்.
4வது இடத்தில் பிரிப்பைன்ஸ்
3வது இடத்தில் ஈகுவடார் உள்ளது. 4வது இடம் பிலிப்பைன்ஸ். 5வது இடத்தில் நிகராகுவா.
7வது இடத்தில் ஈராக்
6வது இடத்தில் குவாத்தி மாலாவும், அடுத்த இடத்தை ஈராக்கும் பிடித்துள்ளன.
10வது இடம் ஹோண்டுராஸ்
8வது இடத்தில் கம்போடியா உள்ளது. 9வது இடத்தை கோஸ்டாரிகா பிடித்துள்ளது. 10வது இடத்தில் இருக்கும் நாடு ஹோண்டுராஸ் ஆகும்.
உம்மனா மூஞ்சி ரஷ்யா
குறைந்த எமோஷனை வெளிப்படுத்தும் நாடுகள் வரிசையில் முதலிடம் வங்கதேசம். 2வது இடத்தில் அஜர்பைஜான் உள்ளது. 3வது இடத்தில் இருக்கும் நாடு ஜார்ஜியா. அடுத்த நாடுகள் வரிசையில் மங்கோலியா, பெலாரஸ், சூடான், லிதுவேனியா, ரஷ்யா, உக்ரைன், மியான்மர், கஜகஸ்தான், போஸ்னியா, மால்டோவா, கொசாவோ ஆகியவை வருகின்றன.
சந்தோஷம் - கோபம் - துக்கம்
148 நாடுகளில் இந்த ஆய்வை நடத்தியது காலப் நிறுவனம். கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோர் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி, கோபம், சோகம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நாடுகளை வரிசைப்படுத்தியுள்ளது காலப்.