வரலாற்றில் முதல்முறை.. இந்திய விமானப்படையில் போர் விமான பைலட்டுகளாக 3 பெண்கள் நியமனம்
ஹைதராபாத்: இந்திய விமானப்படை வரலாற்றில் முதல்முறையாக போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் பைலட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று விமானப்படையில் பணியை துவக்கிய இவர்கள் உள்பட பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் பார்வையிட்டார்.
இந்திய விமான படையில் பெண்கள் ஏற்கனவே இடம்பெற்றிருந்தாலும் போர் விமானங்களை இயக்கும் பணியில் ஆண் பைலட்களே ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். சமீபகாலமாக, பெண் பைலட்களும், போர் விமானங்களை இயக்கும் பயிற்சி பெற்று வந்தனர். இதில் பயிற்சி முடித்த பீகாரைச் சேர்ந்த பாவனா கந்த், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அவானி சதுர்வேதி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகனா சிங் ஆகிய மூன்று பெண் பைலட்களும் விமானப்படையில் இன்று தங்கள் பணியில் சேர்ந்தனர்.
இவர்கள் 3 பேருக்கும் இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பான ஹாக் போர் விமானத்தை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான படையில் பெண் பைலட்களை சேர்ப்பதென மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவு செய்து அறிவித்தது. ஐதராபாத் துண்டிக்கல் விமான படை தளத்தில் விமானப் படை பயிற்சி முடித்த இளம் வீரர்களின் அணிவகுப்பு இன்று காலை நடைபெற்றது. இதில் மூன்று பெண் பைலட்களும் இடம் பெற்றனர். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டார்.
பெண் பைலட் மோகனாவின் தந்தை விமானப் படையில் அதிகாரியாக உள்ளார். அவரது தாத்தாவும் விமானப் படையில் பணி புரிந்தவர். பாவனாவின் தந்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். அவானியின் தந்தை மத்திய பிரதேச அரசில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
India's first women fighter pilots - Bhawana Kanth, Avani Chatuvedi and Mohana Singh - were commissioned in the Indian Air Force today.
இந்திய விமானப்படை வரலாற்றில் முதல்முறையாக போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் பைலட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று விமானப்படையில் பணியை துவக்கிய இவர்கள் உள்பட பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் பார்வையிட்டார்.