தண்ணீருக்காக இந்த நாடு இன்னும் எதையெல்லாம் பார்க்க வேண்டிவருமோ?- நெகிழ வைக்கும் வைரல் குறும்படம்
டெல்லி: ஒரு குறும்படம் இன்று இந்தியா முழுக்க பேசுபொருளாகியுள்ளது. காரணம் அது தொட்டுள்ள கருப்பொருள் அந்த மாதிரியானது.
ஹிந்தியில் கதாப்பாத்திரங்கள் பேசிக்கொண்டாலும், அனைவரும் புரிந்து கொள்ள ஆங்கில சப்-டைட்டில்கள் காட்டப்படுவதால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஒருவேளை சப்-டைட்டில் போடாவிட்டாலும் புரிந்து கொள்ளத்தக்கதே இந்த பிரச்சினை.
காட்சி இப்படி விரிகிறது. வயதான ஒரு நபர் வீட்டுக்குள் வருகிறார். அவர் வயதுள்ள பெண்மணி அன்போடு பேச்சுக்கொடுக்கிறார். ஆனால் அவரைவிட மிக குறைந்த வயதுள்ள மற்றொரு பெண்மணி எரிச்சலோடு சப்பாத்தியை சுட்டு அவருக்கு தருகிறார். கர்ப்பிணியான அவர்தான் 2வது மனைவியாம்.
"நான் எனக்காகவா செய்கிறேன், நமக்காக செய்கிறேன்" என அந்த பெரியவர் பீடிகை வைத்து பேசி அந்த பெண்ணை சமாதானம் செய்கிறார். அது என்ன சஸ்பென்ஸ் என அறியும் போது அதிர்ச்சி காத்திருக்கிறது.
தண்ணீருக்காக, இந்த நாடு எந்த எல்லைக்கு போய்க் கொண்டுள்ளது என்பதை நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்கிறது இந்த குறும்படம். நீங்களும் பாருங்கள். பகிருங்கள்.