For Daily Alerts
Just In
பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா!
டெல்லி: இந்தியாவின் சூப்பர்சோனிக் அதிநவீன பிரமோஸ் ஏவுகணை அரபிக் கடல் பகுதியில் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை நடத்தப்பட்டது.
290 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று திட்டமிட்ட இலக்கினை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த பிரமோஸ் ஏவுகணை இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க் கப்பலில் இருந்து இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
அரபிக் கடல் பகுதியில் நடைபெற்ற இந்த பரிசோதனையின் போது திட்டமிட்ட இலக்கினை பிரமோஸ் வெகு துல்லியமாக தாக்கி அழித்தது.
சாதாரண போர்க் கப்பல்களில் இருந்து ஒரே நேரத்தில் 8 ஏவுகணைகளை மட்டுமே ஏவ முடியும். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 16 ஏவுகணைகளை செலுத்த முடியும்.
Comments
English summary
India on Saturday successfully test-fired the supersonic BrahMos cruise missile from INS Kolkata, the navy's most powerful and newest warship, in Arabian sea, an official said.