ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி!
பாலசூர்: இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலாசூர் கடற்கரை ஏவுதளத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டது.
ஆகாஷ் ஏவுகணை 60 கிலோ எடைகொண்ட ஆயுதங்களை தாங்கிச் சென்று 25 கி.மீட்டர் தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது.
ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டு தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.
சோதனை வெற்றி:
அந்த வகையில் நேற்று பாலாசூரில் காலை 11 மணியில் இருந்து 2 மணி வரை மூன்று முறை இந்திய விமானப்படையால் சோதிக்கப்பட்டதாகவும், அது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எதிரி விமானங்களை அழிக்கும்:
தரையில் இருந்து வானத்தில் சீறிப் பாய்ந்து எதிரிநாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது.
இந்திய விமானப்படையில் சேர்ப்பு:
இந்த ஆகாஷ் ஏவுகணை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
50 கிலோ வெடிகுண்டு சுமக்கும்:
தரையில் இருந்து பாய்ந்து சென்று விண்ணில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை 60 கிலோ எடையுள்ள வெடிகுண்டை சுமந்து செல்லும் திறன் கொண்டது.