நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் கே-4 ஏவுகணை சோதனை வெற்றி
விசாகப்பட்டினம்: நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்குகளைத் தாக்கும் கே-4 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
ஆந்திரா கடற்பரப்பில் கே-4 ஏவுகணை சோதனை நேற்று நடைபெற்றது. சர்வதேச பரப்பில் 3,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்டது கே-4 ஏவுகணை.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக் கூடியது இந்த கே-4 ஏவுகணை. ஆகையால் இது நீருக்கு அடியில் இருந்து இலக்கை நோக்கி செல்லுத்தப்பட்டது. சோதனையின் போது மிக துல்லியமாக இலக்கை தாக்கி அழித்தது ஏவுகணை.
Recommended Video
பாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா.. பலத்த அடி.. மலேசிய பிரதமர் சொன்ன பதில் என்ன தெரியுமா?
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் அரிஹந்த் நீர்மூழ்ழ்கிக் கப்பலில் கே-4 ஏவுகணை பொருத்தப்பட உள்ளது. பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின் நீர்மூழ்கிக் கப்பலில் இந்த ஏவுகணை பொருத்தப்படும்.
டி.ஆர்.டி.ஓ தயாரித்துள்ள 2-வது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை இது. கடந்த 2017-ல் கே ஏவுகணை சோதன தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.