இந்தியா மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம்: ராஜ்நாத்சிங்
டெல்லி: இந்தியா மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இந்திய விமானப் படை தளம் மீது பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி தந்தனர்.
இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 விமானப் படை வீரர்கள் பலியாகினர். இது குறித்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,
I am happy that our forces gave a befitting response in Punjab, I am proud of them: HM to ANI #PathankotAttack pic.twitter.com/TLdhwC427Q
— ANI (@ANI_news) January 2, 2016
பதன்கோட்டில் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது; இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடியை தொடர்ந்து தருவோம்.
பாகிஸ்தானுடன் நல்ல உறவு தொடர வேண்டும் என்பதையே இந்தியா தொடர்ந்தும் விரும்புகிறது என்றார்.