For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரித்வி 2 ஏவுகணை சோதனை சக்ஸஸ்!... இந்திய ராணுவம் அறிவிப்பு

பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பலசோர்: அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட பிரித்வி 2 ஏவுகணை ஒடிஸா கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி அடைந்ததாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

பிரித்வி 2 ஏவுகணை ஏற்கெனவே இந்திய ராணுவத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஏவுகணையை ஒடிஸா மாநிலம், பலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Indian Army announces Prithvi-II's test fired success

இந்திய ராணுவத்தின் ஸ்திர படைகள் காமான்டர்கள் சோதனை செய்தனர். அப்போது கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மிகவும் துல்லியமாக தனது இலக்கை அடைந்தது.

இந்த ஆண்டில் நடத்தப்படும் மூன்றாவது ஏவுகணை சோதனை இதுவாகும். இதே இடத்திலிருந்து இந்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி அக்னி- 5 ஏவுகணையும், பிப்ரவரி 6-ஆம் தேதி அக்னி 1 ஏவுகணையும், பிப்ரவரி 7-ஆம் தேதி பிரித்வி 2 ஏவுகணையும் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணை 80 டிகிரி ஆங்கிளில் செல்கிறது. மேலும் 500 கிலோ எடையை தாங்கும் சக்தி கொண்டது. திரவ எரிப்பொருளால் இயங்கும் தன்மை கொண்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை டிஆர்டிஓ உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

9 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரம் வரை தாக்கும் வல்லமை கொண்டது. கடற்படையினரின் பிரித்வி 2 ஏவுகணை தனுஷ் ஏவுகணை என்று அழைக்கப்படுகிறது.

English summary
India on Wednesday test-fired surface-to-surface ballistic missile Prithvi-II off the Odisha coast
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X