மோடி வருகையை சீர்குலைக்க காஷ்மீரில் தீவிரவாதிகள் சதி- ஊடுறுவல் முறியடிப்பு
ஸ்ரீநகர்: முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்ததை சீர்குலைக்கும் வகையில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஊருடுவ முயன்ற தீவிரவாதிகளின் முயற்சியை ராணுவம் முறியடித்தது.
வைஷ்ணவ்தேவி கோவிலுக்கு சிறப்பு ரயில் சேவையை துவக்கி வைக்கவும், மின்சார திட்டத்தை தொடங்கி வைக்கவும் பிரதமர் நரேந்திரமோடி ஜம்மு காஷ்மீரில் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். இவரது வருகையை சீர்குலைக்கும் நோக்கில், காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவினர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர்.
இதுகுறித்து லெப்பினன்ட் ஜெனரல் கே.எச்.சிங் கூறுகையில், மிகப்பெரும் தலைவர்கள் காஷ்மீர் வரும்போதெல்லாம் இதுபோன்ற ஊருடுவல் சகஜமானது என்றார். கடந்த இரு தினங்களாகவே தீவிரவாதிகள் ஊடுருவ முயல்வதுதும், பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடிப்பதும் தொடர் கதையாகிவருவது குறிப்பிடத்தக்கது.