அரசு உத்தரவிட்டால் .. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தயாராக உள்ளோம்.. இந்திய ராணுவ தளபதி பேட்டி
டெல்லி: அரசு உத்தரவிட்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாங்கள் மீட்போம் என ராணுவ தளபதி ஜெனரல் நரவானே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ராணுவ தளபதி ஜெனரல் நரவானே நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறுகையில், ஒட்டு மொத்த ஜம்மு காஷ்மீருமே இந்தியாவைச் சேர்ந்ததுதான் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நமக்கு சொந்தமானது தான். இதை மீட்க உரிய உத்தவை அரசு பிறப்பித்தால் தகுந்த நடவடிக்கை எடுப்போம்.
சீன எல்லையில் எந்த விதமான சவால்களையும் இந்திய ராணுவம் சந்திக்க தயாராகவே உள்ளது. நமது எல்லைக்காட்டு பகுதி மிகவும் பரபரப்பாக உள்ளது. தீவிரமாக தகவல் பெறப்பட்டே பரிசீலிக்கப்படுகிறது. இந்த நடவடிகையால் பாகிஸ்தானின் செயல்பாடுகளை முறியடிக்க முடிகிறது.
முப்படை தலைமை தளபதி பதவி, ராணுவ விவகாரத்துறை ஆகியவற்றை உருவாக்கியது முப்படைகளை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய நடவடிக்கையாகும்" என்றார்.