எல்லை தாண்டிய எருதுகள்.. நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் ஒப்படைத்த இந்திய ராணுவம்
இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் எல்லை தாண்டிய எருதுகளை நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் ஒப்படைத்திருக்கிறது இந்திய ராணுவம்.
Recommended Video
லடாக் பிராந்தியத்தில் தொடங்கி அத்தனை எல்லைகளிலும் இந்தியாவுடன் மோதல் போக்கை மட்டுமே சீனா கடைபிடித்து வருகிறது. இந்திய பகுதிகளுக்குள் ஊடுருவி ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்திய ராணுவத்தினரோ எல்லை தாண்டி வரும் சீனர்கள், கால்நடைகளை நல்லெண்ண அடிப்படையில் அந்த நாட்டிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் வடக்கு சிக்கிமில் சீனர்கள் குழு ஒன்று 17,000 அடி உயர மலையில் வழிதெரியாமல் தவித்தது.
திபெத் படை- களமிறக்கிய இந்தியா- வெலவெலத்து ஓடிய சீனா...சர்வதேச அரசியல் களத்திலும் பதிலடி வெயிட்டிங்
அவர்களை மீட்டு முதலுதவி செய்து பாதுகாப்பாக சீனா எல்லைப் பகுதிக்கே திருப்பி அனுப்பி வைத்தனர் இந்திய ராணுவ வீரர்கள். இதேபோல் அருணாச்சல பிரதேசத்தில் எல்லை தாண்டிய சீனாவின் 13 காட்டு எருதுகள், கன்றுகளுடன் இந்தியாவுக்குள் வந்துவிட்டன.
#IndianArmy#ArunachalPradesh
— EasternCommand_IA (@easterncomd) September 7, 2020
In a humane gesture, Indian Army handed over 13 Yaks and four Calves that strayed across the LAC on 31 Aug 20 in East Kameng, Arunachal Pradesh to China on 07 Sep 20.Chinese officials present thanked Indian Army for the compassionate gesture@adgpi pic.twitter.com/9MaRpUwX5r
இந்த எருதுகளை பாதுகாப்பாக மீட்டு முறைப்படி சீனா ராணுவத்திடம் இந்திய வீரர்கள் நேற்று ஒப்படைத்தனர். ஆனால் சீனாவோ, அருணாச்சல பிரதேசத்தில் இருந்து 5 இந்தியர்களை கடத்திச் சென்றது. இது குறித்து இந்திய தரப்பில் கேட்டால், அருணாச்சல பிரதேசம் தெற்கு திபெத். அது எங்கள் பிரதேசம். எங்கள் நாட்டு குடிமகன்களை நாங்கள் ஏன் கடத்துகிறோம் என விதண்டாவாதம் பேசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.