For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்

Google Oneindia Tamil News

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Indian Armys Havildar Dipak Karki losts life in ceasefire violation by Pakistan

இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில் 43 சீனா வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் எல்லையில் மிகப் பெரிய அளவிலான போர்ச் சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த ஜூன் மாதம் மட்டும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்திருந்தனர்.

இந்த நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நவ்ஷெரா பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி தாக்குதல் நடத்தியது.

அலி பாய்க்கு வந்த பார்சல்.. காஷ்மீரில் சுற்றி திரிந்த மர்ம டிரோன்.. இந்தியா ராணுவம் சொன்ன ஷாக் தகவல்அலி பாய்க்கு வந்த பார்சல்.. காஷ்மீரில் சுற்றி திரிந்த மர்ம டிரோன்.. இந்தியா ராணுவம் சொன்ன ஷாக் தகவல்

பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலில் ராணுவ வீரர் ஹவில்தார் தீபக் கார்கி வீர மரணம் அடைந்தார். இந்த ஜூன் மாதம் மட்டும் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian Army's Havildar Dipak Karki has lost his life in ceasefire violation by Pakistan in the Nowshera sector (J&K) along the Line of Control.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X