இங்கு கிரிக்கெட், அங்கு கழுத்தறுப்பு.. இந்திய வீரருக்கு பாகிஸ்தான் ராணுவத்தால் நேர்ந்த கொடுமை
Recommended Video
ஸ்ரீநகர்: ஒரு பக்கம் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் கழுத்தை அறுத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொலை செய்துள்ளனர்.
எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் நரேந்திர குமார் என்பவர்தான், பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் படுகொலை செய்யப்பட்டவர் ஆகும்.
கழுத்தை அறுக்கும் முன்பாக அவரை சுட்டு கொலை செய்துள்ளனர் பாகிஸ்தான் ராணுவத்தினர். நரேந்திரகுமார் உடலில் சுமார் 3 இடங்களில் புல்லட் துளைத்த காயங்கள் உள்ளன.
காஷ்மீரின் ராம்கார் செக்டார் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் பாகிஸ்தான் ராணுவம் எப்பொழுதுமே கவனம் செலுத்தும். இந்தியா- பாகிஸ்தான் இடையே ஆசிய கோப்பையில் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறும் நிலையில், இந்த படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் நடுவே வருங்காலங்களில் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வந்துவிடக் கூடாது என்பது இதன் நோக்கமாக இருக்கலாம் என்று உளவுத்துறை சந்தேகிக்கிறது.