For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரபிக்கடலில் இந்திய மீனவர்கள் படகுகள் மீது பாகிஸ்தான் கடற்படை துப்பாக்கி சூடு! ஒரு மீனவர் சாவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகுகளை குறிவைத்து, பாகிஸ்தான் கடற்படை சுட்டதில் இந்திய மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குஜராத் கடல் பகுதியில் (அரபிக்கடல்) மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களின் இரு படகுகள் மீது இன்று பாகிஸ்தான் கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இந்திய படகுகளில் இருந்த 5 மீனவர்களில் ஒரு மீனவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இந்தத தகவலை மீனவர் சங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

Indian fisherman allegedly killed in firing by Pakistani forces

உயிரிழந்த மீனவர் பெயர் இக்பால் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்த சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், விபரம் சேகரித்து வருகிறது.

இத்தாக்குதல் சம்பவத்தால் இந்திய-பாகிஸ்தான் கடல் எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்று காலையில், பாகி்ஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் அந்த நாட்டு விமானப்படை தளத்தை தீவிரவாதிகள் தாக்கமுற்பட்டு கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்நிலையில், இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

English summary
Indian fisherman allegedly killed in firing by Pakistani forces in Arabian Sea, says fishermen association.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X