For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரங்குகளோடு வாழும் 'மங்கி மேன்'.. உ.பியை கலக்கும் தாடி வைத்த தாத்தா!

உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியில் குரங்குகளுடன் வாழும் மனிதர் ஒருவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குரங்குகளோடு வாழும் மங்கி மேன்.. உ.பியை கலக்கும் தாடி வைத்த தாத்தா!- வீடியோ

    ரே பரேலி: உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியில் குரங்குகளுடன் வாழும் மனிதர் ஒருவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். இவர் தினமும் 100 க்கும் அதிகமான குரங்குகளுடன் கொண்டாட்டமாக வாழ்ந்து வருகிறார்.

    குரங்குகளின் உணவுத் தேவைக்காகவே இவர் தினமும் நிறைய செலவு செய்கிறார். கிருஷ்ண குமார் மிஸ்ரா என்ற இவர் தற்போது இந்தியா முழுக்க வைரல் ஆகியுள்ளார்.

    வைரல் தாத்தாவான இவர் தனக்கு மனிதர்களை விட விலங்குகளையும், குரங்குகளையும்தான் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். இவர் பற்றி யூ- டியூபில் வெளியாகி இருக்கும் வீடியோக்களை பார்க்கவே தனி கூட்டம் காத்து இருக்கிறது.

    தி மங்கி மேன்

    தி மங்கி மேன்

    உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியில் வசித்து வருகிறார் கிருஷ்ண குமார் மிஸ்ரா. 79 நிரம்பிய இந்த நபர்தான் இப்போது அந்த மாநிலத்தின் சூப்பர் ஹீரோ. இவருக்கு மக்கள் வைத்து இருக்கும் செல்லப் பெயர் 'தி மங்கி மேன்'. தினமும் இவரைச் சுற்றி 100க்கும் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருகிறது. இவர் வருவதை பார்த்தாலே குரங்குகள் வேகமாக இவரை நோக்கி வந்து விடுகின்றன. பல நாட்கள் இவர் குரங்குகளுடனே படுத்து தூங்கியும் இருக்கிறார்.

    10 வருடமாக தொடர்ந்து வரும் பாசம்

    10 வருடமாக தொடர்ந்து வரும் பாசம்

    இவர் குரங்குகளுக்கு உணவு ஊட்டும் பழக்கம் கடந்த பத்து வருடமாக இருந்து வருகிறது. தினமும் நிறைய பாக்கெட் பிரெட்டுகளை இவர் குரங்குகளுக்காக வாங்கி வருகிறார். இவர் பிரெட்டுகளுடன் வருவதை பார்த்தவுடன் குரங்குகள் நேரடியாக இவரிடம் ஓடி வந்துவிடுகிறது. மேலும் எல்லா குரங்குகளும் இவர் சொன்ன சொல்லை தட்டாமல் அப்படியே கேட்கிறது. புதிதாக சந்திக்கும் குரங்குகளையும் எளிதாக பேசி தன் வசம் இழுத்து விடுகிறார் இந்த தாத்தா.

    உலகம் முழுக்க வைரல்

    உலகம் முழுக்க வைரல்

    இந்த நிலையில் இவரின் வித்தியாசமான செயல்பாடு காரணமாக இவர் உலகம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறார். குரங்குகளுக்கு உணவு வாங்கு கொடுப்பதற்காக வெளிநாட்டில் இருந்து இவருக்கு பலரும் பணம் அனுப்புகிறார்கள். மேலும் இவருக்கு இந்தியாவில் இருந்தும் பலர் உதவி தொகை அனுப்பி வருகின்றனர். ஆனாலும் சமயங்களில் இவரிடம் பணம் இல்லாமல் குரங்குகளுக்கு உணவு வாங்கித் தர முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.

    கிருஷ்ண குமார் வீட்டில் சண்டை

    கிருஷ்ண குமார் வீட்டில் சண்டை

    இவரின் இந்த பழக்கம் காரணமாக இவரது வீட்டில் அடிக்கடி சண்டை வருவதாகவும் கூறப்படுகிறது. இவரது மனைவி தினமும் இவருக்கும், குரங்கிற்கும் இருக்கும் பழக்கத்தை வைத்து சண்டையிட்டு வருகிறார். மேலும் ஊரில் உள்ள மக்களில் சில இவரை மிகவும் ஏளனமாக கிண்டல் செய்தும் வருகின்றனர். ஆனாலும் இவருக்கு இவரது குழந்தைகள் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

    English summary
    A man in India gets completely swarmed by a barrel of monkeys who are eager to eat the bread in his hands.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X