For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தில் பிளவு- ரியாஸ் பட்கல் தலைமையில் புதிய இயக்கம்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியன் முஜாதீன் தீவிரவாத இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் நிறுவனர்களில் ஒருவரான ரியாஸ் பட்கல் தனியாக செயல்படுவதாகவும் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை நிறுவியவர்கள் யாசின் பட்கல், ரியாஸ் பட்கல். இவர்களில் யாசின் பட்கல் நேபாள எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் சிக்கினான்.

Indian Mujahideen remains divided; Riyaz Bhatkal a nobody today

தற்போது இந்த இயக்கமானது இரண்டாக பிளவுபட்டுள்ளது. ரியாஸ் பட்கல் தனியாக ஒரு சிறு இயக்கமாகவும் சுல்தான் அகமது அர்மர் தலைமையில் ஒரு இயக்கமாகவும் இயங்குகிறது.

இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தில் பிளவு ஏற்பட சொல்லப்படும் காரணங்கள்:

  • ரியாஸ் பட்கல் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் அல்கொய்தா இயக்கத்துடன் இணைந்து செயல்பட தீர்மானித்திருக்கிறான்.
  • ரியாஸின் இந்த முடிவை அர்மர் தலைமையிலான முஜாஹிதீன் இயக்க தீவிரவாதிகள் ஏற்கவில்லை.
  • அர்மரைப் பொறுத்தவரையில் சிரியா- ஈராக்கில் யுத்தம் நடத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து செயல்படவே விருப்பம் தெரிவித்திருக்கிறான்.
  • கடந்த மாதம் அர்மர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்த கையோடு அந்த அமைப்புக்கான ஆட்சேர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டும் வருகிறான்.
  • அர்மர், [email protected] என்ற ஐடி மூலமாக யாசின் பட்கலுடன் [email protected] இந்த முகவரியில் பல முறை சாட் செய்திருக்கிறான்
  • இந்த உரையாடல்களிலேயே ரியாஸ் பட்கல், அல்கொய்தாவுடன் இணைய முடிவு செய்திருப்பது குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன.
  • மேலும் ரியாஸ் [email protected] என்ற ஐடி மூலம் அர்மருடன் சாட் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
  • இந்த சாட்டிங் தகவல்களின் அடிப்படையில்தான் இந்தியன் முஜாஹிதீன் இயக்கம் பிளவுபட்டிருப்பதையும் உளவுத்துறை உறுதி செய்திருக்கிறது.,
  • அர்மர், தற்போது அன்சர் உத் தவ்ஹீத் என்ற இயக்கத்தின் பெயரில் செயல்பட்டு வருகிறான்.
  • அத்துடன் தெக்ஹிரிக்- இ தலிபான் என்ற இயக்கத்தின் ஒரு பிரிவாகவும் அர்மர் செயல்பட முடிவு செய்திருப்பதாகவும் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
English summary
The Indian Mujahideen is a divided house today. Riyaz Bhatkal who was one of the co-founders of the outfit finds himself isolated and the current bandwagon is being headed by Sultan Ahmed Armar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X